புதன், டிசம்பர் 08, 2010

தலைமுடி‌க்கு ஏ‌ற்ற ‌வீ‌ட்டு வை‌த்‌திய‌ம்

வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து நீரில் ஊறப் போடவும். மறுநாள் காலை அதை ‌விழுதாக அரை‌த்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊறவும், பிறகு கடலை மாவு கொண்டு தலையை அலசவும்.

வினிகரைத் தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து அலசலா‌ம்.

வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலா‌ம்.

இரண்டு முட்டைகளை உடைத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்க்கவும். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலா‌ம். 

வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசவும்

கருத்துகள் இல்லை: