திங்கள், டிசம்பர் 06, 2010

சூரிய ஒளி

        உடல் ஆரோக்கியத்திற்கு சூரிய ஒளி எவ்வளவு அவசியம்என்பது தற்போது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.சூரிய ஒளி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாகும்.
நாம் கடவுளிடம் வைக்கும் பிரதான கோரிக்கைகளில் உடல்நலனுடன் கூடிய நீண்ட ஆயுள் என்பதே முதன்மையானதாகஇருக்கும்அத்தகைய ஆயுள் எதனால் பெருகுகிறது என்பது குறித்துலண்டனில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பல புதிய தகவல்கள்வெளியாகிவுள்ளன.
ஆயுள் பெருகுவதற்கு உடல் சத்துக்களில் வைட்டமின்-டிமுன்னிலை வகிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்அந்தசத்தால் உடலுக்கு பல நன்மைகள் இருப்பதையும்காலை சூரியஒளியின் மூலம் இந்தச் சத்து உடலுக்கு அதிகளவில்கிடைப்பதையும் ஏற்கெனவே விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
பால்மீன் உள்ளிட்ட உணவுப் பொருள்களில் அதிக அளவில்வைட்டமின்-டி சத்து இருப்பதை சுட்டிகாட்டியுள்ள விஞ்ஞானிகள்,இதனை பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை எனதெரிவித்துள்ளனர்இந்நிலையில்இது தொடர்பாக மேற்கொண்டுநடத்தப்பட்ட ஆய்வில் ரத்தத்தில் வைட்டமின் -டி சத்து 5 முதல் 10நானோ மில்லி லிட்டர் அளவில் இருப்பின்அத்தகையோருக்குஇறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அந்த முடிவுகள்தெரிவிக்கின்றன.
ரத்தத்தில் 20 முதல் 30 நானோ மில்லி லிட்டர் அளவு இந்தச் சத்துஇருப்பின்அவர்களுக்கு ஆயுள் பலம் பெருகுவதுடன்இதயப்பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் வருவதும் பெருமளவு தடுக்கப்படும் எனவிஞ்ஞானிகள் கூறுகின்றனர்எனவேநமது உடல் நலத்தை காத்து,ஆயுள் பலத்தை பெருக்க சூரிய ஒளி உடலுக்கு அவசியம் என்றும்அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆயுள் பலம் பெருகுவதுடன், உடலை ஆரோக்கியமாக பேணுவதற்குசூரிய நமஸ்காரம் எந்தளவுக்கு முக்கியம் என்று நம் முன்னோர்கள்வலியுறுத்திச் சென்றதன் அவசியம்தற்போது ஆய்வின் மூலம்மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது
காலையில் சூரிய ஒளியில் தூய்மையான காற்று உள்ள பகுதியில்நடந்து செல்வது நம் உடல் நலனையும் ஆரோகியத்தையும்வாழ்நாளையும் அதிகரிக்கும் என்பது அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும்

கருத்துகள் இல்லை: