ஞாயிறு, டிசம்பர் 12, 2010

மலச்சிக்கல்

அவரசயுகம் தந்த பெரியதொரு பாதிப்பு மலச்சிக்கல். உடலின் கழிவுகள் சிறுநீராகவும், வியர்வையாகவும், மலமாகவும்தான் வெளியேறுகிறது. இவற்றில் பாதிப்புகள் ஏற்படுமாயின் உடலியல் ரீதியாக பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.பெரும் பாலானவர்கள் பாதிக்கப் பட்டிருந்தாலும் எவரும் பொதுவில் விவாதிக்க தயங்கும் ஒன்றாகவே இருக்கிறது.பரபரப்பான வாழ்க்கை முறையினால் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் மற்றும் முறையற்ற உணவு பழக்க வழக்கங்களுமே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம்.

ஆரோக்கியமான மனிதனின் ஒரு வாரத்திற்கு குறைந்தது பத்து முறையாவது மலம் கழிக்க வேண்டும்.நமது குடலில் கழிவுகள் தேங்குவது கூடாது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள், நார்சத்து மிக்க உணவு பொருட்களை தொடர்ந்து சாப்பிடுபவர்கள், அழுத்தங்கள் இல்லாத எளிய வாழ்க்கை முறையை பின்பற்றுவோர் போன்றவர்களுக்கு மலச்சிக்கல் வருவதில்லை.

இன்றைக்கு ஆங்கில மருத்துவத்தில் மலமிளக்கிக்கான மாத்திரைகள் உலகளாவிய அளவில் பெரிய வர்த்தகத்தை ஈட்டித் தருகின்றன. சித்தர்கள் எளிய முறையில் இந்த பிரச்சினையில் இருந்து நிரந்தரமாக விடுபடும் ஒரு வழியினை கூறியிருக்கின்றனர்.

காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் மூன்று குவளை(டம்ளர்) வெதுவெதுப்பான நீரில் சுமார் ஒன்றரை தேக்கரண்டி கல் உப்பினை கரைத்து, குடிக்க வேண்டும். (நம்மால் சகித்துக் கொள்ளும் அளவிற்கு உப்பை சேர்த்துக் கொள்ளலாம்.). இதன் பிறகு சிறிது நேரம் வீட்டிற்குள் நடைபழக வேண்டும். அடுத்த கொஞ்ச நேரத்தில் ஒரே மூச்சில் சிறுகுடல், மற்றும் பெருங்குடலில் சேர்ந்திருக்கும் அத்தனை கழிவுகளும் வாரிச்சுருட்டி வெளியேறிவிடும்.

இந்த முறையை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு செய்தல் வேண்டும். ஆறாவது நாள் முதல் காலையில் உங்களை அறியாமலே வயிற்றைப் புரட்டிக் கொண்டு வரும்..... மூன்று முதல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இதை செய்வதால் குடல் சுத்தமாவதுடன், சுரப்பிகளும் புத்துணர்ச்சி பெறும்.